திருச்சி அருகே இரு சக்கர வாகனத்தை இடித்து மரத்தில் மோதி நின்ற தனியார் பேருந்து : விபத்தில் ஒருவர் பலி - 20க்கும் மேற்பட்ட பேருந்து பயணிகள் படுகாயம்
Jun 1 2023 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரிலிருந்து திருச்சி சென்ற தனியார் பேருந்து, மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். லால்குடி அடுத்த வாளாடி அருகே சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதைத் தொடர்ந்து சாலையோர மரத்தில் இடித்து நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.