மயிலாடுதுறையில் உணவுக்கு கையேந்திய மாற்றுத்திறனாளி தற்போது பெட்டிக்கடை முதலாளி : சமூக வலைதளம் மூலம் மாற்றுத்திறனாளிக்கு உதவிய இளைஞருக்கு பாராட்டு
Jun 1 2023 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் அடுத்த வேளை உணவுக்கு கையேந்திய மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க உதவிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்தர்காடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஆறுமுகம் என்பவர், வருமானம் இல்லாததால் அக்கம்பக்கதினரிடம் உணவு வாங்கி சாப்பிட்டு பொழுதை கழித்து வந்தார். இதனை மயிலாடுதுறையில் அறக்கட்டளை நடத்தி வரும் பாரதிமோகன் என்பவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை கண்ட சேலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர், ஆறுமுகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து பெட்டிக்கடை வைக்க உதவியுள்ளார். இதனை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் திறந்து வைத்து, ஆறுமுகத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.