வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பரப்பியவர்பீகாரில் கைது : போலி வீடியோ பரப்பியவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
Mar 30 2023 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பரப்பிய பீகாரை சேர்ந்த மணீஷ் காய்ஷப் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வடமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து போலீசார் பீகார் விரைந்தனர். பீகாரில் இருந்து மணிஷ் காய்ஷப்பை கைது செய்து தமிழகம் அழைத்து வந்த அவர்கள், மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நடுவர் நீதிமன்ற நீதிபதி டீலாபானு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.