நெல்லை அருகே நடுக்கடலில் கன்னியாகுமரி மீனவர்களுக்கும், இடிந்தகரை மீனவர்களுக்கும் இடையே மோதல் - கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய இடிந்தகரை மீனவர்கள் 37 பேர் மீது வழக்குப்பதிவு
Feb 8 2023 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசியதாக நெல்லை இடிந்தகரையை சேர்ந்த 37 நாட்டுப் படகு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை அருகே 4 கடல் மைல் தொலைவில் நேற்று முன் தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் நாட்டுப் படகு மீனவர்களின் வலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதைடுத்து இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் 12 நாட்டுப்படகில் சென்று கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களை நாட்டு வெடிகுண்டுகள் வீசி விரட்டி அடித்தனர். இதுதொடர்பாக இடிந்தகரையை 37 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.