சென்னை பல்லாவரம் அருகே பள்ளி மாணவியை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகரின் வாரிசு
Feb 4 2023 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பல்லாவரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக நிர்வாகியின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பல்லாவரம் அஸ்தினாபுரம் பகுதியில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி வசிக்கும் வீட்டின் உரிமையாளரான திமுக மாவட்ட பிரதிநிதி சின்னதுரையின் மகன் விக்னேஷ் கத்தியை காட்டி மிரட்டி மதுபானத்தில் வெள்ளைநிற பவுடரை கலந்து கொடுத்து மயக்கமடைய செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி தன்னிடம் பேச மறுத்ததால் பெற்றோர்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் திமுக பிரமுகரின் ஊதாரி மகன்.பள்ளியில் மாணவி தொடர்ந்து சோர்வாக காணப்பட, மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் திமுக பிரமுகர் மகனின் கொடூரச்செயல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அ\ளிக்க, திமுக பிரமுகரின் கொடூர புத்தி கொண்ட வாரிசை தேடி வருகின்றனர்.