டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் கடும் நடவடிக்கை - தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என் சிங் எச்சரிக்கை
Feb 4 2023 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் கோவாவிற்கு ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தெற்கு ரயில்வே இயக்குநர் ஆர்.என்.சிங் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.சிங், பாலம் வேலைகள் முடிந்து ஜூன் மாதம் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்றார். டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வட இந்தியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.