திருவாரூரில் தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Feb 4 2023 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெயா ப்ளஸ் செய்தி மூலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக, திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கீழக்காவதுகுடி ஊராட்சி வடகால் பகுதியில் சேதம் அடைந்த நெற்பயிர்கள் மற்றும் பயறு, உளுந்து பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பாதிப்புகள் குறித்து உடனடியாக அரசுக்கு தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவித்தனர்.