சென்னை வியாசர்பாடியில் சாலையோர கடையில் பரோட்டோ சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம்
Jan 30 2023 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேற்று இரவு சாலையோர கடை ஒன்றில் தனது வீட்டிற்கு பரோட்டா வாங்கி சென்றுள்ளார். குடும்பத்தினருடன் சேர்ந்து பரோட்டா சாப்பிட்ட கார்த்திக்கிற்கு இரவு சுமார் 11 மணியளவில் குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.