காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கத்தில் கேஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் பலி 5ஆக உயர்வு
Oct 3 2022 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில், சிலிண்டர் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
தேவரியம்பாக்கத்தில் ஜீவானந்தம் என்பவர், சிலிண்டர் குடோன் வைத்துள்ளார். இங்கு கடந்த 28ம் தேதி, கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நேரிட்டது. இந்த விபத்தில், குடோனில் அருகில் இருந்த 12 பேர் படுகாயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீவானந்தம், பூஜா, குணால் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த ஆமோத்குமார், 13 வயது சிறுவன் கிஷோர் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.