கன்னியாகுமரி: அரசுப் பேருந்தில் நடத்துநர் சிகரெட் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
Oct 3 2022 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, அரசுப் பேருந்தில் நடத்துநர் சிகரெட் பிடித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக நகரப் பேருந்து, பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த நடத்துநர் ஒருவர், பேருந்தில் இருந்தபடியே புகைப்பிடித்துள்ளார். இதுதொடர்பாக படந்தாலுமூடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.