அ.தி.மு.க. பொதுக்குழுவில் விதிமுறை மீறல் நடைபெற்றதாக எழுந்த புகார் - ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Jun 28 2022 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க. பொதுக்குழுவில் விதிமுறை மீறல் நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் திரு.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 23 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அது மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது போன்றவை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.