தூத்துக்குடி: எல்.ஐ.சி பங்குகளை குறைத்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு
May 21 2022 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் பங்கு மதிப்பு உள்ள எல்ஐசியை மத்திய அரசு 5 லட்சம் கோடி ரூபாய் என குறைத்து விற்பனை செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், எல்ஐசி பங்கு விற்பனையை தடுக்க ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடும் என்று எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட தலைவர் திரு. முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய எல்ஐசி ஊழியர்களின் கோட்ட மாநாடு வருகிற 28, 29-ம் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.