சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தொடர் மழையால் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு
May 21 2022 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தொடர் மழையால் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்காடு சுற்றுலாத்தலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்காடு மலைப்பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே, திடீரென ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தன. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, ராட்சத பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.