திருச்சி: நவலூர் குட்டப்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதால் பார்வையாளர் பலி
Jan 18 2022 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் 400 காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்க, இளைஞர்கள் 300 பேர், களமிறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர்கள் பகுதியில் எதிர்பாராத விதமாக காளை ஒன்று புகுந்தது. அந்தக் காளை முட்டியதில் காயமடைந்த அந்த நபர், குடல் சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த நபர், வண்ணன்கோவிலைச் சேர்ந்த வினோத்குமார் என்பது தெரியவந்தது. பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டின்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.