புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் : தமிழக அரசு அறிவிப்பு
Mar 8 2021 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. மகாராஷ்டிரா, கேரளா உட்பட 6 மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்படுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் இ.பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.