ஒப்பந்த அடிப்படையில் ஒருநாள் ஊதியம் ரூ.800 வழங்க கோரிக்கை : சென்னையில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
Feb 27 2021 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டிய ஒருநாள் ஊதியம் 800 ரூபாயை உடனடியாக வழங்கக்கோரி, சென்னையில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தற்காலிக ஊழியர்களுக்கு சட்டப்படியான சம்பளத்தை வழங்க இந்தியன் வங்கி நிர்வாகம் மறுத்து வருவதாகவும், குறைந்தபட்ச கூலி சட்டத்தை நடைமுறைபடுத்த தயாராக இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.