நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கம் : உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொள்வதாக பயணிகள் அச்சம்
Feb 27 2021 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூரில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கார் ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால், மலைப் பாதையில் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், நீலகிரி மாவட்டத்தில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மலைப் பாதையில் பேருந்தை இயக்க குறைந்தது 6 மாத காலம் கட்டாயமாக பயிற்சி எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தற்போது கூடலூர் பணிமனையில், ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. எந்தவித பயிற்சி இல்லாமல் மலைப் பாதையில் பேருந்தை இயக்குவதால் விபத்து நேரிடக்கூடிய அபாயமான சூழல் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.