சென்னையில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம்: மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி
Nov 27 2020 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்த வெள்ள நீரால், மின்சாதங்கள் பழுதாகியுள்ளன. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனியில் புகுந்த மழை நீரால் மின் சாதனங்கள் மற்றும் வாகனங்கள் பழுதாகி விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார பாதிப்பில் இருக்கும் தங்களுக்கு, இந்த மழை மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேங்கி நிற்கக் கூடிய மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.