இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி கரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் - மாலத்தீவிலிருந்து திரும்பிய பிறகு லண்டன் சென்ற நிலையில் பாதிப்பு கண்டுபிடிப்பு
Jun 23 2022 8:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாலத்தீவிலிருந்து திரும்பிய பிறகு இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்காக ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்துக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி பங்கேற்கவில்லை. மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து மாலத்தீவில் விடுமுறையைக் கழித்தார். அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு லண்டன் சென்ற விராட் கோலி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதால் இந்திய அணியினருடன் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனினும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தரப்பில் அதிகாரபூர்வமாகத் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.