திருச்சி குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலம் : பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
Sep 26 2023 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் திருத்தேரைத் தொடர்ந்து அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.