அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாளுக்கு நவதானியங்களை காணிக்கையாக செலுத்திய விவசாயிகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்
Sep 23 2023 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பயிர் வகைகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டி, பலவகையான நவதானியங்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினர். திருப்பதிக்கு செல்ல முடியாத ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு பொங்கல் வைத்து முடிகாணிக்கை செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.