திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் தாயார் திருவடி சேவை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Oct 3 2022 7:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் தாயார் திருவடி சேவையில் ஆயிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவவிழா 9-நாட்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 26ம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவின் 7-ம் நாளில் ஸ்ரீதாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரெங்கநாயகி தாயார் மாலை மூலஸ்தானத்திலிருந்து வெண்பட்டு உடுத்தி, கிளிமாலை, ஏலக்காய் ஜடை மாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்க பல்லக்கில் புறப்பட்டு கண்ணாடி அறைக்குச் சென்றார். அரையர்கள் சேவைகண்டு பின்னர் தங்கமுலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.