மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து 14 முதல் 61% கட்டண தொகையை விமான நிறுவனங்கள் குறைத்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் பெருமிதம்
Jun 8 2023 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து 14 முதல் 61 சதவீதம் அளவுக்கு கட்டண தொகையை விமான நிறுவனங்கள் குறைத்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து காரணமாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் உயர்ந்தது. இதேபோன்று டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணங்களும் விமான நிறுவனங்களால் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், மத்திய அரசு விமான நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பெருமளவு கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்தார். மக்களை பாதிக்காத வகையில், மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.