2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் : 7 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் 10.45 மணிக்கு தாமதமாக புறப்பட்டது
Jun 5 2023 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோரமண்டல் விரைவு ரயில் 2 நாட்களுக்கு பிறகு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. ஒடிஷா விபத்தால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக ரெயில் சேவை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் காலை 10:45 மணிக்கு இயக்கப்பட்டது. விஜயவாடா, ராஜமுந்திரி விசாகப்பட்டினம் வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசாவின் பிரம்மப்பூர், புவனேஸ்வர் மற்றும் பதராக் ஆகிய பகுதி வழியாக பாலசோரைக் கடந்து கொல்கத்தா ஷாலிமர் ரெயில் நிலையத்தை நாளை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.