ரயில் விபத்தில் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் முழு பட்டியலையும் உடனடியாக பொது தளத்தில் வெளியிட வேண்டும் - ரயில்வே அமைச்சகத்திற்கு ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா கோரிக்கை
Jun 4 2023 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் புகைப்படங்கள் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் புகைப்படங்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விவரங்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. srcodisha.nic.in, bmc.govt.in, osdma.org என்ற இணையதளங்களில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உதவிகளை பெற ஒடிசா-புவனேஷ்வர் கட்டுப்பாட்டு உதவி எண் 1927-யை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.