டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய 3 நாய்கள் : ராக்கி, ரோமியோ மற்றும் சோனி ஆகிய நாய்களுக்கு பிரிவு உபசார விழா
Jun 1 2023 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் மோப்பம் பிடிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ராக்கி, ரோமியோ மற்றும் சோனி ஆகிய மோப்ப நாய்கள் பணிஓய்வு பெற்றன. எட்டு ஆண்டுகாலமாக மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராக்கி, ரோமியோ மற்றும் சோனி ஆகிய மோப்ப நாய்களுக்கு பிரிவு உபசார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூன்று நாய்களும் மேடையில் ஏற்றப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் நாய்கள் மூன்றும் SECA என்ற விலங்கு நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.