கேரளாவில் கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறப்பு : உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு
Jun 1 2023 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு மாத கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் உற்சாகத்துடன் முதல்நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, மேள தாளங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.