ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார் : ஜூன் 2வது வாரத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்
Jun 1 2023 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் ராஞ்சி முதல் பாட்னா வரை இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட நிலையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய ரயில்வே அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.