மணிப்பூர் மாநில டிஜிபி-யாக ராஜீவ் சிங் நியமனம் : ஆயுதங்கள் வேட்டை தீவிரப்படுத்தப்படும் என அமித்ஷா அறிவித்த நிலையில் நியமனம்
Jun 1 2023 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூர் மாநில டிஜிபியாக, மத்திய ஆயுத படையின் ஐ.ஜியாக பணியாற்றிய ராஜீவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள் இதுவரை திருப்பி தரபாடாத நிலையில், ஆயுத வேட்டை நாளை முதல் தீவிரப்படுத்தப்படும் என அமித்ஷா அறிவித்தார். இந்நிலையில் மணிப்பூர் மாநில டிஜிபியாக ராஜீவ் சிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 29ம் தேதி மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு சிறப்பு அனுமதியுடன் ராஜீவ் சிங் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டார். இந்தநிலையில் மாநில காவல்துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.