ஆக்ராவில் துணி வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை : சிசிடிவி காட்சிகளை வைத்து ரயில்வே காவல்துறை விசாரணை
Mar 30 2023 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆக்ரா ரயில் நிலையத்தில் துணி வியாபாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து ஜான்சி நோக்கி சென்ற கதிமான் ரயில் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தை அதிவேகமாக கடந்த போது கண் இமைக்கும் நேரத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆக்ராவை சேர்ந்த துணி வியாபாரி ஹாரிஸ் தேவனி என்பதும், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.