டெல்லியில் கைது செய்த போலீசாருடன் மல்லுக்கட்டிய இருவர் : போலீசாரை சுற்றி வளைத்த பொதுமக்கள் - பரபரப்பு
Mar 30 2023 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போலீசாரும், பொதுமக்களும் அடித்துக் கொண்ட காட்சி பெரும் பரபரப்பாகியுள்ளது. இந்திரா விகாஸ் பகுதியில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, இருதரப்புக்கும் கைகலப்பாகி, மோதல் வெடித்தது. இதில், கைது செய்யப்பட்டவரும், அவரது சகோதரரும் போலீசாருடன் மல்லுக்கட்டிய நிலையில், அவர்களது ஆதரவாளர்களும் திரண்டனர். பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போலீசாரை சுற்றிவளைத்து தாக்கியதால் பரபரப்பு நிலவியது. நீண்டி தடிகளை வைத்து போலீசாரும் திருப்பி தாக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக வழக்கு பதிந்த போலீசார், இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.