நவி மும்பையில் குப்பை கொட்டும் இடத்தில் பற்றிய பயங்கர தீ - 7 வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
Feb 4 2023 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் குப்பை கொட்டும் இடத்தில் பற்றிய பயங்கர தீயை தீ அணைப்புத் துறை வீரர்கள் பலமணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். நவி மும்பையில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தீ அணைப்புப் படையினர் உடனடியாக 7 வாகனங்களுடன் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியை மேற்கொண்டனர். பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்ததாக அறிவித்த தீ அணைப்புப் படையினர் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள காவல் துறையினர், தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.