சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருடன், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மனைவி பேச்சுவார்த்தை - அதிருப்தி எண்ணைத்தை கைவிடுமாறு சமாதானம் பேசுவதாக தகவல்
Jun 27 2022 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருடன், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவின் மனைவி திருமதி. ராஷ்மி தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவின் மனைவி திருமதி. ராஷ்மி தாக்கரே மூலம், அக்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, திருமதி. ராஷ்மி தாக்கரே, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனைவிகளிடம் பேசி, அதிருப்தியை கைவிடச் செய்யுமாறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் பா.ஜ.க.வுடன் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.