எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த வடகரை பகுதியில் யுவராஜ் என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பயங்கர வெடி சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் வெடிவிபத்து நேர்ந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, பட்டாசு வெடிவிபத்தில் ஒருவர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்..