இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹார்த்திக் பாண்டியாவிடம் ரூ.4 கோடி கையாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹார்த்திக் பாண்டியாவிடம் நான்கரை கோடி ரூபாய் கையாடல் செய்த அவரது வளர்ப்பு சகோதரரை போலீசார் கைது செய்தனர். 


ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும், வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்டியாவுடன் சேர்ந்து தொழில் ஒன்றை தொடங்கினர். இதில் ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரரும் தலா 40 சதவீதம் முதலீடு செய்தனர். வைபவ் 20 சதவீதம் முதலீடு செய்துவிட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளையும் கவனித்துக்கொண்டார். இந்நிலையில் வைபவ், ஹர்த்திக்கிடம் தெரிவிக்காமல் தனி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், தனது பழைய நிறுவனத்தில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 33.3 சதவீதமாக உயர்த்திக்கொண்டார். இதுதொடர்பாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வைபவ் நான்கரை கோடி ரூபாய் கையாடல் செய்ததாக,  ஹர்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவ்-ஐ கைது செய்தனர்

Night
Day