வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான  வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால், வாக்குஎண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுந மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கின் சாரம்சம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

varient
Night
Day