வள்ளலார் பக்தர்களின் மண்டையை உடைத்த திமுகவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் அருகே திமுக கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களின் மண்டையை உடைத்த திமுகவினரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் காங்கிரஸ் வேட்பாளர் பார்வதிபுரம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத திமுகவினர், வேட்பாளர் வருகைக்காக திமுக கொடி கம்பங்கள் நட்டனர். அப்போது தனது வீட்டின் முன்பு கொடி கம்பம் நடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த வாசுதேவன் மற்றும் அவரது தாயார் தனலட்சுமி ஆகியோரை தாக்கிய திமுகவினர் அவர்களின் மண்டையை உடைத்தனர்.

Night
Day