பிரதான சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் - வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எர்ணாவூர் பிரதான சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மாநகராட்சியில் உள்ள எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் சாலையில் கழிவுநீர் தேங்கி ஆறாக ஓடுகிறது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Night
Day