பாலியல் வன்கொடுமை - நேர்மையான விசாரணை அவசியம் - திருமாவளவன் வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்  என விசிக தலைவர் தொல் திருமாளனவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி மேலும் சிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்றும் காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

varient
Night
Day