தமிழகம்
ஜெயக்குமார் வீட்டில் மற்றொருவரின் கைரேகை - புதிய திருப்பம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் தலை நசுங்கி உயிரிழந்தார். ஆம்பூரை அடுத்த மேல் மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் திருமணமாகி கொல்லகுப்பம் பகுதியில் வசித்து வருவதால், அவரை பார்க்க மணிமேகலை தனது கணவர் மற்றும் மகனுடன் ஒரே பைக்கில் சென்றுள்ளார். அப்போது கொல்லகுப்பம் பகுதியில் பைக் நிலைத்தடுமாறியுள்ளது. இதனால் பைக்கில் இருந்து மூவரும் கீழே விழுந்தனர். அச்சமயத்தில் பின்னால் வந்த டிராக்டர் மணிமேகலை மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை மறுநாள...