திருச்சி விமான நிலையத்தில் 64 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. வழக்கம்போல், சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகிக்கும்படியாக வந்த 3 பயணிகளின் உடைமையில் மறைத்து எடுத்து வந்த 64 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day