திமுகவினர் வடக்கு - தெற்கு பிரச்சனையை மீண்டும் எடுத்து வருகிறார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவினர் வடக்கு - தெற்கு பிரச்சனையை மீண்டும் எடுத்து வருகிறார்கள் என்றும் அதை மீண்டும் கொண்டுவந்தால் அதன் விளைவை திமுகவினர்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி அரங்கில் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த த.சி.க.கண்ணனின் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவா்  அண்ணாமலை கலந்துகொண்டு உருவப்படத்தை திறந்து வைத்தார்...  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு 32 சதவீதமாக இருந்தது எனவும் பிரதமர் மோடி பதவியேற்ற பின்னா் அதை 42 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் எனவும் கூறினார்...\\

Night
Day