தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்று, நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day