சேலம்: சாலையை சீரமைக்க கோரி கருப்பு கொடியேந்தி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கருப்பு கொடியுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நரசிங்கபுரம் முதல் அய்யங்கரடு பகுதி வரையிலான பிரதான சாலை, கடந்த 13 வருடங்களாக சேதமைடந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கருப்பு கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Night
Day