கொலை வழக்கு-கடலூர் திமுக எம்.பி மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு எதிரான கொலை வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடலூர் தொகுதி திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி கோவிந்தராசு என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை சிபிசிஐடி, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்‍கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்‍கு மாற்றக்‍கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தாக்‍கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

varient
Night
Day