எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது : புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவரும், வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவருமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்‍கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். நமது நாட்டின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்‍கது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளளர்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதள பதிவில், பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதனுக்‍கும், நமது நாட்டின் முன்னாள் பிரதமர்களான திரு. சரண்சிங் மற்றும் திரு. நரசிம்மராவ் ஆகியோருக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர் - வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் - உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்ததோடு உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்த திரு.எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது தமிழ் மண்ணிற்கு பெருமை அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோரின் தன்னலமற்ற சேவைகளுக்காகவும், நம் நாட்டு மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சிறந்த மக்கள் நலப்பணிகளை போற்றிடும் வகையிலும் திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் நமது நாட்டின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங், திரு.நரசிம்மராவ் ஆகியோர்களது நினைவை எந்நாளும் போற்றிடுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day