2019ஆம் ஆண்டுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2019 ஆம் ஆண்டு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 14 ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் குறித்தான தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை தாக்‍கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day