இந்தியா
டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
பதற்றமான ஷம்பு எல்லையை ஒரு வாரத்தில் திறக்க வேண்டும் என அரசுக்கு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை உறுதி செய்யக்கோரி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த ஜனவரி மாதம் பேரணியாக சென்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு கருதி பஞ்சாப்-ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் அத்தியாவசியம் மற்றும் மருத்துவ அவசர சூழல்களை கருத்தில் கொண்டு தற்காலிக வழித்தடங்களை உருவாக்க கோரி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் ஷம்பு எல்லையை திறக்க வேண்டும் என ஹரியானா அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...