ஜே.இ.இ. முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், வரும் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வின் முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வின் 2ம் கட்ட தேர்வு வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கிய நிலையில், மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Night
Day