கேரள சட்டசபையை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்ககோரி கேரள சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

கேரளா மாநிலத்தில் முதியோருக்கு வழங்கப்பட்டுவந்த உதவித் தொகையை அம்மாநில கம்யூனிஸ்ட் அரசு  நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்காக முதியவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு பணமின்றி தவித்து வருகின்றனர்.  இதையடுத்து முதியோர் உதவிதொகையை மீண்டும் வழங்கக்கோரி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா சட்டசபையை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீச்சியடித்தும் அவர்களை விரட்டியடித்து முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர்.

Night
Day